Monday, September 3, 2012

கன்னி பதிவு


பதிவுலக மூத்தோர்களுக்கும், பதிவுலக ஜாம்பவான்களுக்கும், இந்த பதிவுலக கத்துக்குட்டியின் வணக்கம். இது எனது முதல் பதிவு. வெகுகாலமாக பல்வேறு (வலைப்பூ) பதிவுகளை படித்து மட்டுமே வந்த நான், புதிய வலைப்பூ தொடங்கி சொந்தமாக பதிவு எழுத ஆரம்பித்ததே என் வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல்லாக எண்ணுகிறேன். பதிவு எழுதும் அளவுக்கு எனக்கு அனுபவ அறிவோ, எழுத்தாற்றலோ கிடையாது, இருந்தாலும் ஒரு குருட்டு தைரியத்தில் எழுத வந்துவிட்டேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவரை ஒரு சிறிய பத்தி(para) கூட சுயமாக எழுதியதில்லை. நீங்கள் எழுதிய, எழுதிக் கொண்டிருக்கும் பதிவுகளே எனக்குள் இருக்கும் "பதிவு எழுதும் ஹார்மோன்" தூண்டப்பட்டதற்கு காரணம். எனது பதிவில் பிழை இருந்தாலும் தங்கள் ஆதரவையும் வழிகாட்டுதலையும் தொடர்ந்து எனக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி
நாஞ்சில் தமிழன்.

No comments:

Post a Comment